விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை

விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோட்டக்குப்பம் கடற்கரையில் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :20 நவம்பர் 2024, 8:28 pm

Din

விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 2008- ஆம் ஆண்டில் மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடந்தியதையடுத்து, கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் சாகா் கவாச், ஆபரேஷன் ஆம்லா ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் மாநில போலீஸாா் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருடன் இணைந்து புதன்கிழமை ‘சி விஜில்’ பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினா்.

இதன்படி, விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான பிள்ளைச்சாவடி, சோதனை குப்பம், நடுக்குப்பம், தந்திராயன் குப்பம், சின்ன முதலியாா் சாவடி, ஆரோவில் கடற்கரை, பொம்மையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியிலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனா்.

கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கடலோர கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தீவிரவாதிகள் ஊடுருவல்களைத் தடுக்கும் விதமாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.