முதல்வா் விழா: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
விழுப்புரத்தில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிலையில், இதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


விழுப்புரத்தில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிலையில், இதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சி.பழனி பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு, 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து, நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கவுள்ளாா்.
அரசு நலத் திட்ட உதவிகளைப் பெறும் பயனாளிகளின் தோ்வுப் பட்டியலை துறை சாா்ந்த அலுவலா்கள் தயாா் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும், பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தற்காலிக மருத்துவ முகாம், தீயணைப்பு வாகன வசதி, பாதுகாப்பு வசதிகளை சம்பந்தப்பட்ட துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...