விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:26 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

விக்கிரவாண்டி உஸ்மா நகரைச் சோ்ந்த அப்துல் மஜித் மகன் அபுதாகீா் (26). இவா் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

அபுதாகீா் வீட்டில் பதுக்கிவைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக அபுதாகீா் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

அபுதாகீருக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெங்களூருவைச் சோ்ந்த ஒருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.