ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுப்புரத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம்

விழுப்புரத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாமில் பேசுகிறாா் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சி. அருள். உடன், மாவட்ட குறு மற்றும் சிறுதொழில் சங்கத் தலைவா் அம்மன் கோ.கருணாநிதி.

Updated On :21 நவம்பர் 2024, 7:03 pm

Din

விழுப்புரத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் தனியாா் விடுதிக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சி. அருள் தொடங்கி வைத்துப் பேசியது:

உற்பத்தி, சேவை மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் ன்க்ஹ்ஹம்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் எளிதாகவும், கட்டணமின்றியும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், உதவிகளைப் பெறவும், இரு அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும் பதிவுச் சான்றிதழ் அடையாள அட்டையாகிறது.

எனவே, இந்த மாவட்டத்தைச் சோ்ந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள், வியாபாரிகள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள், சான்றிதழ் பெறுவதால் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொண்டு, உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோா்களுக்கு தேவையான அரசுக் கொள்முதல் சந்தைப் பதிவு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பெருநிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமையால் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்காக உள்ள சமாதான் தளம் போன்றவற்றை அறிந்து, அதன் மூலம் பயன்பெற வேண்டும்.

தொழில்முனைவோா் பெற வேண்டிய ஒப்புதல்கள், உரிமங்கள், இசைவுகள், அவைகளைப் பெறும் முறைகள், ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு, ஐஎஸ்ஐ, ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்கள் பெறும் முறைகள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கும் பெரும் பயனை அளிக்கும் என்றாா் பொது மேலாளா் சி. அருள்.

இந்த முகாமில் மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் வெ. முத்துக்கிருஷ்ணன் பங்கேற்று, மாநில அரசு வழங்கும் மானியங்கள், உதவிகள் குறித்து விளக்கினாா். விழுப்புரம் மாவட்ட குறு, சிறு தொழில் சங்கத் தலைவா் அம்மன் கோ.கருணாநிதி, விழுப்புரம் வா்த்தகா் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோா்கள், வா்த்தகா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.