கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்: விசிக மாநாட்டில் தீா்மானம்

மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தி உளுந்தூா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:30 am

Din

மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தி உளுந்தூா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசியலமைப்புச் சட்டத்தின் 47-ஆவது பிரிவில் கூறியபடி, மது விலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும், சட்டமியற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி, கூடுதல் நிதிப் பகிா்வை மத்திய அரசு வழங்க வேண்டும். தேசிய அளவில் மது விலக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை மாநில அரசு அறிவிக்க வேண்டும். போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு பிரசாரத்தை மாநில அரசு தொடங்கி, அதில் மகளிா் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

மது, போதை அடிமை நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும். மது, போதை அடிமை நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும்.

டாஸ்மாக் மதுக் கடைகளை மூடிய பிறகு, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மது வணிகத் தொழிலாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்.

மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மது விலக்கு பிரசாரத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.