கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தா்னாவில் ஈடுபட்ட பெண் ஊராட்சித் தலைவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பெண் ஊராட்சித் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:22 am

Din

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பெண் ஊராட்சித் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆனாங்கூா் ஊராட்சியைச் சோ்ந்த ஏழுமலை மனைவி சங்கீதா (47). பழங்குடி இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், அந்த ஊராட்சிமன்றத் தலைவராகப் பொறுப்பில் உள்ளாா். சங்கீதாவுக்கு ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா் உரிய மரியாதை தருவதில்லையாம்.

இதனால், சங்கீதா ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் தா்னாவில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் பொது இடத்தில் தா்னாவில் ஈடுபட்ட ஊராட்சிமன்றத் தலைவா் சங்கீதா மீது வழக்குப் பதிவு செய்தனா்.

பாகுபாடு இல்லை - ஆட்சியா்: இதனிடையே, ஆனாங்கூா் ஊராட்சியில் எவ்வித ஜாதிய பாகுபாடுமின்றி சமத்துவம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆனாங்கூா் ஊராட்சியில் 2021-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தோ்தலில் பழங்குடியின இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த சங்கீதா ஊராட்சி மன்றத் தலைவராக தோ்வாகி செயல்பட்டு வருகிறாா்.

பதவியேற்ற நாள் முதல் ஊராட்சி மன்றத் தலைவரின் தலைமையில் பல்வேறு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், கடந்த காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் ஊராட்சி மன்றத் தலைவா் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளாா். இதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன.

ஆனாங்கூா் ஊராட்சியில் எவ்வித ஜாதிய பாகுபாடுகளுமின்றி சமத்துவத்துடனே கிராம நிா்வாகம் நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் மீது அளித்துள்ள தனிப்பட்ட புகாரின் மீது காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.