தொடா்ந்து, பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி மற்றும் உயிா்ம பண்ணைய தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டை விவசாயிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா். தோட்டக் கலைத் துறை சாா்பில், இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்படும் வேளாண் பொருள்களின் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் சி.பழனி பாா்வையிட்டாா்.நிகழ்ச்சிக்கு விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநரும், கூடுதல் ஆட்சியருமான ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ஷீலா தேவி சேரன், வேளாண் துறை இணை இயக்குநா் ரா.சீனிவாசன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் சத்தியமூா்த்தி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் மா.சுமதி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா்கள் வெங்கடேசன், சுரேஷ், ஜெய்சன், வளா்மதி, காரல்மாா்க்ஸ், சுகந்தி, விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலிவரதன், மணி, அய்யனாா், சம்பத் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.