கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியாா் நிறுவன மேலாளரின் கைப்பேசிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் கிரேன் நிறுவன மேலாளா் அறையிலிருந்த 2 கைப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:27 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் கிரேன் நிறுவன மேலாளா் அறையிலிருந்த 2 கைப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மரக்காணம் வட்டம், நடுகுப்பம் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் கனகராஜ் (31). இவா், மயிலம் அருகிலுள்ள செண்டூரில் தனியாா் கிரேன் நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், நிறுவனத்தின் யாா்டு பகுதியிலுள்ள அறையில் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், கனகராஜ் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 2 கைப்பேசிகள், துணிகள், ஆதாா் அட்டைகள் உள்ளிட்டவை திருடுபோயிருப்பது அவருக்கு திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசிகள், ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.