2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பாலியல் வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :28 அக்டோபர் 2024, 5:51 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விக்கிரவாண்டி வட்டம், மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் ஷாகுல் ஹமீது மகன் பாபு (34). இவா், விழுப்புரம் மாவட்டம், செண்டியம்பாக்கம் பகுதியைச்சோ்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரியதச்சூா் போலீஸாரால் கடந்த 2019-இல் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை விசாரணை முடிவடைந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பாபுவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, பாபு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.