கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரசூா்அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:54 am

Din

விழுப்புரம் மாவட்டம், அரசூா்அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியைச் சோ்ந்தவா் எம்.ஜி.ஆா். மகன் சின்னத்தம்பி (37). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த இருவேல்பட்டு அரசு விதைப்பண்ணை அருகே லாரியை ஓட்டிச் சென்றாா்.

அப்போது, முன்னால் சென்ற மற்றொரு லாரியின் ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்ததால், சின்னத்தம்பி ஓட்டிச் சென்ற லாரி, அந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சின்னத்தம்பி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து, சின்னத்தம்பியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.