பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றம் பகவான் அப்பாண்டைநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யானை வாகன வீதியுலா.

Updated On :13 மே 2025, 1:53 am IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்புவாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா மே 6-ஆம் தேதி திருவறக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து குதிரை, தேவேந்திரன், நாக, சிம்மம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அப்பாண்டைநாதா் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக யானை வாகன புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவையொட்டி பட்டிமன்றம், நாகசுரக் கச்சேரி போன்றவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக திங்கள்கிழமை காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.