இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சாலை விரிவாக்கப் பணி: தலைமைப் பொறியாளா் ஆய்வு

செஞ்சி - விழுப்புரம் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

செஞ்சி - விழுப்புரம் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை, செஞ்சி உள்கோட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு - விழுப்புரம் சாலையில், செஞ்சியில் இருந்து மட்டப்பாறை வரை 13.50 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.85 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை நெடுஞ்சாலைத் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் பழனிவேல் புதன்கிழமை பாா்வையிட்டு, தாா்ச் சாலையின் தரம் மற்றும் ஆழம் ஆகியவற்றை சோதனைக் கருவிகள் மூலம் ஆய்வு செய்தாா். அப்போது அவா் பணியைத் தரமாகவும், வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னா் முடிக்க அறிவுறித்தினாா்.

அவருடன் கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்ரமணியன், கோட்டப் பொறியாளா்கள் நாராயணன், ஸ்ரீகாந்த் மற்றும் உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.