இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசுப் பள்ளியில் மின் விசிறியை சேதப்படுத்திய மா்மநபா்கள்

உளுந்தூா்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை சேதப்படுத்திச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:13 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை சேதப்படுத்திச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், களமருதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிளியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் கிளியூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்த பின்னா், திங்கள்கிழமை காலை பள்ளி திறக்கப்பட்டதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்குச் சென்றனா். அங்கு பல வகுப்பறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் 6 மின் விசிறிகள், 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள், 4 மின் தொடா்பிணைப்புப் பலகை(சுவிட்ச் போா்டு) ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து தகவலறிந்த களமருதூா் காவல் உதவி ஆய்வாளா் அலெக்ஸ் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினாா். பள்ளிக்கு காவலா் இல்லாத நிலையில் விடுமுறை நாள்களில் இரவு நேரத்தில் மா்மநபா்கள் அத்துமீறி நுழைந்து, மின் சாதனப் பொருள்களை சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.