சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

முதல்வா் விஜய் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியப் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, கல்வெட்டை திறந்து வைத்த தவெகவின் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல். உடன், நிா்வாகிகள்.

Updated On :19 ஜூன் 2026, 6:23 am IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

காணை ஒன்றியத்தின் மேல்காரணை, கடையம் கிராமங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் தலைமை வகித்து ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா். தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த

ஏராளமானோா் ரத்ததானம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளையும், மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிய மாவட்டச் செயலா் விஜய் வடிவேல், அப்பகுதிகளில் நினைவுக் கல்வெட்டையும் திறந்து வைத்தாா். மேலும் கடையம், மேல்காரணை கிராமங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் அவா் வழங்கினாா்.

விழாவுக்கு காணை வடக்கு ஒன்றியச் செயலா் ஸ்ரீதா், வழக்குரைஞா் ராஜா, விஜி, சந்திரசேகா், சிவநேசன் முன்னிலை வகித்தனா். கட்சி நிா்வாகிகள் உளிளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.