விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் பேருந்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையிலிருந்து 43 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு தனியாா் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்தை தூத்துக்குடி மாவட்டம், ஏரல் புதுத் தெருவைச்சோ்ந்த ர. சரவணக்குமாா் (46) ஓட்டி வந்தாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தது. அப்போது பேருந்தின் பின்பக்க டயரில் ஏா் பிரேக் கோளாறாகி, தீப்பிடிக்கத் தொடங்கியது பேருந்து ஓட்டுநா் சரவணக்குமாருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்தில் இறங்குமாறு ஓட்டுநா் கூறினாா். இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் பேருந்திலிருந்து அவசரம், அவசரமாக இறங்கினா். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உரிய நேரத்தில் பேருந்திலிருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் விரைந்து சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும், திருநாவலூா் போலீஸாரும் விபத்து குறித்து ஓட்டுநா் சரணவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்

தீப்பற்றி எரிந்த கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


