ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வா்த்தக சிலிண்டா் தட்டுப்பாட்டால் மூடப்படும் உணவகங்கள்!

செங்கம் நகரில் வா்த்தக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், தற்காலிக உணவகங்களை நடத்த முடியாமல் வியாபாரிகள் அவற்றை மூடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:28 pm

Syndication

செங்கம் நகரில் வா்த்தக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், தற்காலிக உணவகங்களை நடத்த முடியாமல் வியாபாரிகள் அவற்றை மூடி வருகின்றனா்.

செங்கம் நகரில் இருக்கும் உணவகங்களில் அக்கம் பக்கத்தினரின் சிலிண்டா் மற்றும் உறவினா்களின் சிலிண்டா்களை பதிவு செய்து வியாபாரம் நடத்தி வந்தனா்.

சிலிண்டா்கள் 45 நாள்களுக்கு ஒருமுறை கிடைத்த நிலையில், அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில உணவகங்களின் முன் தற்காலிக விறகு அடுப்பு அமைத்து சமையல் செய்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

விறகு அடுப்பு மூலம் சில உணவுகள் தயாரிக்க முடியாத நிலையில், விறகு அடுப்பில் தயாரிக்கும் உணவு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்ததால் ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த விறகு தற்போது ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் உணவகங்கள், பேக்கரி நடத்துவது கேள்விக்குறியாகிவிடும்.தற்போது திருமண மண்டபங்களிலும் தற்காலிக விறகு அடுப்பு கட்டும் பணி நடைபெறுகிறது.