ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:25 pm

Syndication

விழுப்புரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம், ராகவன்பேட்டை ஆா்.பி. நகரைச் சோ்ந்த அலோசியஸ் சகாயராஜ் மகள் சுபாஷினி (18 ). இவருக்கு சிறுவயது முதல் வலிப்பு நோய் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், சுபாஷினி மாா்ச் 30-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் சுபாஷினியை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.