பெங்களூரில் வரும் டிச.17-ஆம் தேதி முதல் இலவச ஜெய்ப்பூர் செயற்கைகால் முகாம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கர்நாடக மார்வாரி அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பகவான் மகாவீர் மாற்றுத் திறனாளிகள் உதவிக்குழுவின்(ஜெய்ப்பூர் செயற்கைகால்)ஒத்துழைப்புடன் கர்நாடக மார்வாரி அமைப்பு சார்பில் பெங்களூரு, ஜெயநகர், அசோகா தூண் அருகே உள்ள மகாராஜா அக்ரசென் மாளிகையில் டிச.17-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை இலவச ஜெய்ப்பூர் செயற்கைகால் முகாம் நடக்கவிருக்கிறது.
செயற்கைகால் முகாமில் கலந்துகொண்டு இலவசமாக செயற்கைகாலை பெறவிரும்புவோர் டிச.16-ஆம் தேதிக்குள் 9620000244, 9886521885 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் முன்பதிவு செய்துகொள்வது அவசியமாகும். இந்தமுகாமில் செயற்கைகாலின் அளவுகள் எடுக்கப்பட்டு, 2018, ஜன.7-ஆம் தேதி பயனாளிகளுக்கு செயற்கைகால்கள் விநியோகிக்கப்படும். இந்த முகாம் பெங்களூரில் 11-ஆவது ஆண்டாக தொடர்ந்து நடத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.