பெங்களூரில் போதைப்பொருள் விற்றதாக நைஜீரியாவைச் சேர்ந்த பெலிக்ஸ் மதுகா (29) கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு சம்பிகேஹள்ளி காவல் சரகத்தில் வசித்து வந்தவர் இவர், அர்காவதி லேஅவுட் தனிச்சந்திரா பிரதான சாலையில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று பெலிக்ஸ் மதுகாவைக் கைது செய்து 55 கிராம் எடையுள்ள போதைப்பொருள், செல்லிடப்பேசிகள், அடையாள அட்டை, 2 கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீஸார்
விசாரிக்கின்றனர்.