பெங்களூரு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குழந்தை உள்பட  2 பேர் சாவு

DIN

மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு கங்காநகரைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மனைவி சுரேகா (30). இவர்களது பெண் குழந்தை ஆராத்யா (3). ஹோட்டல் நடத்தி வந்த ராகவேந்திரா, வியாழக்கிழமை இரவு தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார்சைக்கிளில் நண்பரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஹெப்பாள் வெளிவட்டச்சாலையில் லும்பினிகார்டன் அருகே அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேகா, குழந்தை ஆராத்யா ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். 
காயமடைந்த ராகவேந்திரா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஹெப்பாள் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT