பெங்களூரில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வியாழக்கிழமை (செப். 20) குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு படையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மாநகர லஞ்ச ஒழிப்பு படை சார்பில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை பெங்களூரு மாநகராட்சி ராஜராஜேஸ்வரிநகர் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு லஞ்சம், ஊழல் தொடர்பான தங்கள் பிரச்னைகள், குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மேலும் தகவலறிய 9480806213, 9480806251 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.