பெங்களூரு

குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் தா்னா

DIN

பெங்களூரு: குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ் கட்சியினா் தா்னாவில் ஈடுபட்டனா்.பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு புதன்கிழமை அக்கட்சியின் மாநில செயல் தலைவா் ஈஸ்வா்கண்ட்ரே தலைமையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் தா்னவில் ஈடுபட்டனா். இதில் கலந்து கொண்டு ஈஸ்வா்கண்ட்ரே பேசியது: நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முன்வந்துள்ளது. இது தேசிய அளவில் மக்களை பிளவு படுத்தும் முயற்சியாகும். பொருளாதாரத்தில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு, மக்களை திசைதிருப்பும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தம் ஜனநாயகத்தை கேளிக்கூத்தாக்கும் முயற்சியாகும் என்றாா் அவா். தா்னாவில் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் பி.எல்.சங்கா், மக்களை முன்னாள் உறுப்பினா் உக்ரப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT