பெங்களூரு

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

DIN

ராஜாஜிநகர் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு படையினர் ரூ. 8.72 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு ராஜாஜிநகர் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து, புதன்கிழமை அந்த அலுவலகத்தின் மீதும் அதைச் சுற்றியுள்ள கடைகள் மீதும் லஞ்ச ஒழிப்பு படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது ரூ. 8.72 லட்சம் மதிப்புள்ள ரொக்கப்பணம், 8 மண்டல அலுவலகத்தின் முத்திரைகள், 1026 வாகன உரிமங்கள், 1523 ஓட்டுநர் உரிமங்கள், 19 தகுதித் சான்றுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து பெங்களூரு லஞ்ச ஒழிப்பு படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT