டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எந்த இடங்களில் களமிறங்க வேண்டும்.
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எந்த இடங்களில் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்
டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி ரோஹித் சர்மா 3-வது இடத்தில் களமிறங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் எனக் கூறுவேன். ரோஹித் சர்மா 3-வது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும். மூன்றாவது இடத்தில் களமிறங்கும்போது அவருக்கு ஆட்டத்தின் போக்கை புரிந்துகொள்ள சிறிது நேரம் கிடைக்கும். விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது பவர் பிளேவில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com