பெங்களூரு

மனைவி கொலை:  கணவர் கைது

DIN

மனைவியை கொலை செய்ததாக,  கணவரை போலீஸார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினய்குமார் (31), பெங்களூரில் தங்கியிருந்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.   இவரது மனைவி காயத்ரிதேவி (27), வீட்டு வேலைகளை செய்துவந்தார்.  திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு,  2 குழந்தைகள் உள்ளனர். 
தம்பதிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்,  சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,  வினய்குமார் ஆத்திரமடைந்து  காயத்ரி தேவியின் கழுத்தை நெரித்து,  தலையில் சுத்தியலால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த காயத்ரிதேவி,  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து வழக்கு பதிந்த ராமமூர்த்திநகர் போலீஸார்,  வினய்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

SCROLL FOR NEXT