பெங்களூரு

பியூ வாரிய இயக்குநராக கனகவள்ளி நியமனம்

DIN

பியூ வாரிய இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி எம்.கனகவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தின் பல்வேறு பணியிடங்களில் பதவி வகித்து வரும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையராக பணியாற்றி வந்த எம்.கனகவள்ளியை பியூ கல்வி வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பி உலக பாரம்பரியப் பகுதி மேலாண்மை ஆணையத்தின் ஆணையராக இருந்த ஜி.ஆர்.ஜே.திவ்யாபிரபு, உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கர்நாடக அரசு தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஜி.லட்சுமிகாந்த்ரெட்டி, ராய்ச்சூரு மாவட்ட ஊராட்சியின் தலைமை செயல் இயக்குநராகவும், இளைஞர் அதிகார பரவலாக்கல் மற்றும் விளையாட்டுத் துறை ஆணையராக இருந்த கே.சீனிவாஸ் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு பெங்களூரு மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT