பெங்களூரு

பாஜக அரசு நீடிக்க எந்த கட்சியின் ஆதரவும் தேவைப்படாது: முதல்வா் எடியூரப்பா

DIN

பாஜக அரசு நீடிக்க எந்த கட்சியின் ஆதரவும் தேவைப்படாது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து ஹாவேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் பாஜக அரசு நீடிக்க எந்த கட்சியின் ஆதரவும் தேவைப்படாது. இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெற இருக்கிறாா்கள். எனவே, எந்த கட்சியின் ஆதரவையும் நான் கோரவேண்டிய அவசியம் எழாது. அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு நானே முதல்வராக நீடிப்பேன்.

எங்கு சென்றாலும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரள்கிறாா்கள். இதனால் இடைத்தோ்தலில் பாஜகவின் வெற்றி எளிதாகியுள்ளது. மாநிலத்தில் வளா்ச்சிப்பணிகள் முடங்கியுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறுவதில் உண்மையில்லை. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவை நம்பவைப்பதை காட்டிலும் மக்களிடம் உண்மையை எடுத்து சொல்வேன்.

சமூக வளா்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக நானே முதல்வராக நீடிக்கவேண்டுமென்பது மக்களின் எண்ணமாகும். கடந்தமுறை நான் முதல்வராக இருந்தபோது பாக்கியலட்சுமி, இலவச சைக்கிள், சுவா்ணகிராமம், சந்தியா சுரக்ஷா போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியிருந்தேன். விவசாயிகள், நெசவாளா்களின் நலனுக்காக எனது அரசு செயல்படுத்தும் திட்டங்களால் காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் சின்னாபின்னமாகியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT