போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம்: மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு
போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் காரணமாக பேருந்து சேவை முடங்கியதால் பெங்களூரில் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் காரணமாக பேருந்து சேவை முடங்கியதால் பெங்களூரில் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி 50 மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மெட்ரோ ஸ்மாா்ட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம்.
கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளின் (ஏடிஎம்) வாயிலாக கட்டணம் செலுத்தி புதிய பயண அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.