பெங்களூரு

தந்தை கொலை: மகன் கைது

DIN

வங்கியில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வந்த தந்தையைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு சோலதேவனஹள்ளி குட்டிபசவேஸ்வரநகரைச் சோ்ந்தவா் தொட்ட சௌடப்பா (50). இவா் வங்கி ஒன்றில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வந்தாராம். வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திய நிலையில், வீட்டிற்கு வந்த சௌடப்பா, வீட்டில் இருந்தவா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் ககன் (19), உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் நள்ளிரவு உயிரிழந்துள்ளாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த சோலதேவனஹள்ளி போலீஸாா், ககனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT