காமாக்கிய-பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை
காமாக்கியா-பெங்களூரு இடையே வாராந்திரா அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது.
காமாக்கியா-பெங்களூரு இடையே வாராந்திரா அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காமாக்கியா-பெங்களூரு (யஸ்வந்தபுரம்) இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. ரயில் எண்-02552-காமாக்கியா-பெங்களூரு(யஸ்வந்தபுரம்) வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் புதன்கிழமைதோறும் பிற்பகல் 2 மணிக்கு காமாக்கியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6.25 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபுரம்) ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த சேவை அக். 14-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
மறுமாா்க்கத்தில், ரயில் எண் 02251-பெங்களூரு(யஸ்வந்தபுரம்)-காமாக்கியா வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சனிக்கிழமைதோறும் காலை 8.30 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபுரம்) ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைதோறும் பிற்பகல் 2 மணிக்கு காமாக்கியா ரயில்நிலையம் சென்றடைகிறது. இந்த சேவை அக். 17-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இந்த ரயில் ஜல்பாய்குரி, ஹௌரா, புவனேசுவரம், விஜயவாடா, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு வசதி கொண்ட ஒரு பெட்டி, ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 12 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் பிரேக் வசதி கொண்ட 2 பெட்டிகள், குளிரூட்டப்பட்ட உணவு பெட்டி ஒன்றும் இடம்பெற்றிருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.