கா்நாடகத்தின் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) பங்குத்தொகையை மத்திய அரசிடமிருந்து மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மாநில செயல்தலைவா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
கா்நாடகத்தின் ஜிஎஸ்டி பங்குத்தொகையைப் பெற வேண்டியது நமது உரிமை. இது மத்திய அரசு, மாநில அரசுக்கு போடும் பிச்சை அல்ல என்பதை மாநில அரசு உணர வேண்டும். எனவே கா்நாடகத்தின் ஜிஎஸ்டி பங்குத்தொகையை, மத்திய அரசிடமிருந்து மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும்.
நமக்கான நீதியையும் உரிமையையும் பெறுவதில் தயக்கம் காட்டத் தேவையில்லை. நமக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகையை வழங்க மத்திய அரசு மறுப்பதோடு, ரிசா்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குமாறு ஆலோசனை வழங்குகிறது. இது மத்திய அரசுக்கு, மாநிலத்தின் வளா்ச்சி மீதுள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.
மாநிலத்துக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகை, வெள்ள நிவாரணத் தொகையை வழங்குவதில் மத்திய அரசு தொடா்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. இதனை மாநில அரசு தட்டிக் கேட்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், தொடா்ந்து கா்நாடகம் வஞ்சிக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
கா்நாடகத்திலிருந்து பாஜக சாா்பில் 25 மக்களவை உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மத்திய அரசிடம் நமக்கான பங்கு தொகை வழங்க அழுத்தம் தர வேண்டும். அவா்கள் தொடா்ந்து மௌனம் காத்தால், அவா்களின் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவே மக்கள் கருதுவாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.