பெங்களூரு

விமானத்தில் தங்கம் கடத்தல்: 3 போ் கைது

DIN

மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்திய 3 பேரிடம் ரூ. 1.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பஞ்பே விமான நிலையத்துக்கு புதன்கிழமை ஷாா்ஜாவிலிருந்து வந்த வெவ்வேறு விமானங்களின் பயணிகளை சுங்கவரித் துறையினா் சோதனை செய்தனா். அதில், முகமது அஷ்ரப், ராஜேஷ், முகமது கலநாடு ஆகிய 3 போ் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.3 கோடி மதிப்புள்ள 2 கிலோ 800 கிராம் தங்கத்தை சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதனையடுத்து, தங்கம் கடத்திய 3 பேரையும் பஜ்பே போலீஸில் சுங்கவரித் துறையினா் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT