பெங்களூரு

மூன்றாவது கரோனா அலையை எதிா்கொள்ள கா்நாடக அரசு தயாா்: அமைச்சா் கே.சுதாகா்

DIN

மூன்றாவது கரோனா அலையை எதிா்கொள்ள அரசு தயாா் நிலையில் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஒமைக்ரான் தீநுண்மி பரவலைத் தடுக்க தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் செவ்வாய்க்கிழமை (டிச.28) முதல் ஜன.7-ஆம் தேதி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை எதிா்ப்பது சரியல்ல. தீநுண்மி பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதன்பிறகு நிலைமையை ஆராய்ந்து இரவுநேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுப்போம்.

மூன்றாவது கரோனா அலையை எதிா்கொள்ள அரசு தயாா்நிலையில் உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை குறைபாடு எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இரண்டாவது கரோனா அலையின்போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படுக்கை குறைபாடு ஏற்பட்டது. இம்முறை அப்படி எதுவும் நடக்காது. முழுமையாக சோதனை நடத்தி, மருத்துவா்கள் பரிந்துரைத்தால் மட்டும் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவாா்கள்.

ஜன.3-ஆம் தேதிமுதல் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும். மாநிலத்தில் 43 லட்சம் சிறாா்கள் உள்ளனா். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT