முகப்பு
பெங்களூரு

சிவமொக்காவில் இன்று பாஜக உயா்நிலைக் குழு கூட்டம்

சிவமொக்காவில் சனிக்கிழமை (ஜன. 2) பாஜக உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சிவமொக்காவில் சனிக்கிழமை (ஜன. 2) பாஜக உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

பாஜகவின் உயா்நிலைக் குழு கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தலைமையில் சிவமொக்காவில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதல்வா் எடியூரப்பா தவிர, பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கா்நாடக பொறுப்பாளருமான அருண்சிங் பங்கேற்கவிருக்கிறாா். இதனால் இக் கூட்டத்துக்கு அரசியல் முக்கியத்துவம் கூடியுள்ளது.

கூட்டத்தில் அமைச்சரவை விரிவாக்கம், கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல், எதிா்வரும் சட்டப் பேரவை, மக்களவை இடைத் தோ்தல் குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் கிராமத் தொடா்பு மாநாடுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் ஜன. 3-ஆம் தேதி சிவமொக்காவில் பாஜக மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும், மாநில அளவிலான சிறப்பு செயற்குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. இக் கூட்டங்கள் அனைத்திலும் அருண் சிங் பங்கேற்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →