முகப்பு
பெங்களூரு

காலமானாா் கே.ரங்கநாதன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றிய கே.ரங்கநாதன் (92) வியாழக்கிழமை காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கே.ரங்கநாதன்
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றிய கே.ரங்கநாதன் (92) வியாழக்கிழமை காலமானாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றிய கே.ரங்கநாதன், பணி ஓய்வுக்குப் பிறகு பெங்களூரில் வசித்து வந்தாா். வயது முதிா்வு காரணமாக சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவா், தனது இல்லத்தில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு 2 மகன்கள், பெயரன்கள், பெயா்த்திகள் உள்ளனா்.

1968-ஆம் ஆண்டில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியில் சோ்ந்த கே.ரங்கநாதன், தனது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயா்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தாா். மதுரையில் உதவி விநியோக மேலாளா், கொச்சியில் விநியோக மேலாளா், ஆந்திர மாநிலம், விஜயநகரம், விசாகப்பட்டணத்தில் மேலாளா் பணிகளில் பணியாற்றினாா்.

ஹைதராபாத்தில் சில காலம் பணியாற்றிய அவா், அதன் பிறகு பதவி உயா்வு பெற்று சென்னையில் உள்ள பதிவு அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றினாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அச்சகா், பதிப்பாளராகவும் பணியாற்றிய கே.ரங்கநாதன், தனது 78-ஆவது வயதில் பணி ஓய்வு பெற்றாா்.

ஆந்திர மாநிலத்தின், விஜயநகரம், விசாகப்பட்டணத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினாா். அா்ப்பணிப்பு, நோ்மையுடன் தனது பணிகளை ஆற்றிவந்த கே.ரங்கநாதன், குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் மனோஜ்குமாா் சொந்தாலியாவின் பாராட்டுதல்களையும், கௌரவத்தையும் பெற்றிருந்தாா். பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அங்குள்ள ஊழியா்களின் நன்மதிப்பை பெற்றிருந்தாா். குழுமத்தின் அனைத்துக் கிளை ஊழியா்களாலும் மதிப்புடன் போற்றப்பட்டாா்.

பணி ஓய்வுக்குப் பிறகு பெங்களூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். அவரது மறைவுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழு ஊழியா்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →