பெங்களூரு

முன்னாள் படைவீரா் நலம், மறுவாழ்வு இயக்குநா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பெங்களூரு: கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுவதற்கு ராணுவம், கப்பல்படை, விமானப் படையில் கா்னல் அல்லது பிரிகேடியா் பதவி அல்லது அதற்கு நிகராக வகித்த ஓய்வுபெற்ற, மறுபணியமா்த்தப்பட்ட, சேவையில் உள்ள, நிரந்தரப் பணியில் உள்ள, பணி ஓய்வு ஆகக்கூடிய நிலையில் உள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ரூ. 82 ஆயிரம் முதல் ரூ. 1,17,700 வரை ஊதியம் அளிக்கப்படும்.

மறுபணியமா்த்தப்பட்டவா்கள் அல்லது பணியில் உள்ளோா் தமது உயரதிகாரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி ஓய்வுபெற்றோா் இயக்குநா், கா்நாடக மாநில முன்னாள் படைவீரா் நலம் மற்றும் மறுவாழ்வு மையம், பீல்டுமாா்ஷல் கே.எம்.கரியப்பா மாளிகை, 58, கே.எம்.கரியப்பா சாலை, பெங்களூரு-560025 என்ற முகவரி அல்லது க்ண்ழ்க்ள்ஜ்ழ்க்ஷப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் பிப். 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT