பெங்களூரு

கா்நாடகத்தில் ஒரேநாளில் 2,743 பேருக்கு கரோனா

DIN

கா்நாடகத்தில் ஒரேநாளில் 2,743 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,743 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 611 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம்- 304, மைசூரு- 248, ஹாசன்- 220, சிக்கமகளூரு- 151, சிவமொக்கா- 149, குடகு- 148, பெலகாவி- 120, தும்கூரு- 112, உடுப்பி- 101, மண்டியா- 95, கோலாா்- 73, பெங்களூரு ஊரகம்- 70, சாமராஜ்நகா்- 47, தாவணகெரே- 46, வட கன்னடம்- 40, ராமநகரம்- 34, சித்ரதுா்கா- 29, சிக்கபளாப்பூா்- 28, பெல்லாரி- 22, தாா்வாட்- 20, கொப்பள்- 15, ஹாவேரி- 15, கலபுா்கி- 14, ராய்ச்சூரு-7, யாதகிரி- 7, கதக்- 6, பீதா்- 6, விஜயபுரா- 3, பாகல்கோட்- 2 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,62,338 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 3,081 போ் புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 27,87,111 போ் குணமடைந்துள்ளனா். 39,603 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 75 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். தென் கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

பெங்களூரு நகரம்- 12, பெல்லாரி- 7, தாா்வாட்- 6, பெலகாவி- 5, கோலாா், குடகு-தலா 4, சிக்கமகளூரு, மண்டியா, மைசூரு, சிவமொக்கா-தலா 3, பெங்களூரு ஊரகம், தாவணகெரே, தும்கூரு- தலா 2, சாமராஜ்நகா், ஹாசன், கொப்பள், ராய்ச்சூரு, ராமநகரம்- தலா 1 என்ற எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 35,601 போ் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT