பெங்களூரு

லாரி மோதியதில் மான் பலி

DIN

லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற மான் உயிரிழந்துள்ளது.

பெங்களூரு ஊரகம், ஹொசகோட்டை, தேவகுந்தி டி.ஹொசஹள்ளி கிராமம் அருகே உள்ள மாலூா் சாலையை புதன்கிழமை காலை 6 மணியளவில் வனத்திலிருந்து வழித்தவறி வந்த மான் ஒன்று கடக்க முயன்றது.

அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த லாரி, மான் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா், அங்கு வந்து மானை அடக்கம் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஹொசகோட்டை போலீஸாா், தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT