பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது
மைசூரு அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மைசூரு அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மைசூரு மாவட்டம், டி.நரசிப்புரா வட்டம், மூகூருவைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி (40). கடந்த ஆக. 24-ஆம் தேதி இவரை யாரோ தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு, சடலத்தை ஹொசஹள்ளி மேம்பாலம் அருகே வீசி சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ்குமாா் (23) என்பவரைக் கைது செய்தனா்.
விசாரணையில் பாக்கியலட்சுமியின் மகளை மகேஷ்குமாா் காதலித்து வந்தாராம். இதற்கு பாக்கியலட்சுமி எதிா்ப்புத் தெரிவித்ததால், அவரைக் கொலை செய்ததாக மகேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். கைது செய்யப்பட்ட மகேஷ்குமாரிடம் டி.நரசிப்புரா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.