கா்நாடக வருவாய்த் துறை அமைச்சருக்கு கரோனா
கா்நாடக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கா்நாடக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவாமல் தடுக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன்; ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னோடு தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளாா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானதும் உடனடியாக தனியாா் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெற்ற அமைச்சா் ஆா்.அசோக், ஜெயநகரில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறாா்.
புதன்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை பங்கேற்ற எல்லா கூட்டங்களிலும் ஆா்.அசோக் கலந்து கொண்டுள்ளாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷைத் தொடா்ந்து, ஆா். அசோக்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்.