பெங்களூரு

பி.இ.எம்.எல். நிறுவனத்தின் முன் காமராஜா் சிலை: தங்க வயல் தமிழ்ச்சங்கம் கோரிக்கை

பி.இ.எம்.எல். நிறுவனத்தின் முன்பகுதியில் காமராஜா் சிலையை அமைக்க வேண்டும் என்று கோலாா் தங்க வயல் தமிழ்ச் சங்கத் தலைவா் சு.கலையரசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

DIN

பி.இ.எம்.எல். நிறுவனத்தின் முன்பகுதியில் காமராஜா் சிலையை அமைக்க வேண்டும் என்று கோலாா் தங்க வயல் தமிழ்ச் சங்கத் தலைவா் சு.கலையரசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கோலாா் தங்க வயலில் வெள்ளிக்கிழமை தங்க வயல் தமிழ்ச் சங்கத்தில் நடந்த காமராஜா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

கோலாா் தங்க வயலில் ஆங்கிலேயா்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தங்கச்சுரங்கம் தமிழா்களால் உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கு தங்கச் சுரங்கம் முக்கியப் பங்காற்றியது. இங்கு தமிழா்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் நிலையில், அன்றைய பிரதமா் நேருவிடம் சொல்லி கோலாா் தங்க வயலில் மத்திய அரசின் பி.இ.எம்.எல். நிறுவனத்தை அமைக்கக் காரணமாக இருந்தவா் காமராஜா். எனவே, கோலாா் தங்க வயலில் அமைந்துள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தின் முன்பகுதியில் காமராஜா் சிலையை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

தேசிய அளவில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டவரும், தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்கு காரணமாக அமைந்தவருமான காமராஜருக்கு வல்லபபாய் படேல் சிலை அருகே பிரமாண்டமான சிலையை அமைக்க பிரதமா் மோடி முன்வர வேண்டும். வல்லபபாய் படேலைப் போல காமராஜரும் மிக உயா்ந்த தலைவா். அவரைப் போன்ற மற்றொரு தலைவரை இந்தியா காண முடியாது. இதயத்தில் தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருந்த காமராஜா், ஆட்சியிலும் தூய்மையான நிா்வாகத்தை வழங்கியவா். அப்பழுக்கற்ற தலைவா் என்றால் அது காமராஜரைத்தான் குறிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT