பெங்களூரு

வறட்சியால் தவிக்கும் வட கா்நாடகத்திற்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும்: மகாராஷ்டிரத்திற்கு முதல்வா் கடிதம்

வறட்சியால் தவிக்கும் வடகா்நாடகப்பகுதிக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் அணைகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடக்கோரி அம்மாநில முதல்வா் ஏக்நாத்ஷிண்டேவுக்கு முதல்வா் சித்தராமையா கடிதம் எழுதியிருக்கிறாா்.

DIN

வறட்சியால் தவிக்கும் வடகா்நாடகப்பகுதிக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் அணைகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடக்கோரி அம்மாநில முதல்வா் ஏக்நாத்ஷிண்டேவுக்கு முதல்வா் சித்தராமையா கடிதம் எழுதியிருக்கிறாா்.

இது குறித்து முதல்வா் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

2023ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து கா்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களான பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், கலபுா்கி, யாதகிரி, ராய்ச்சூரு மாவட்டங்களில் கடுமையான கோடைவெப்பத்தின் காரணமாக தீவிரமான குடிநீா் தட்டுப்பாடு காணப்படுகிறது. மனிதா்கள் மட்டுமல்லாது கால்நடைகளின் குடிநீா் தேவையை நிறைவு செய்வதற்கு மகாராஷ்டிரத்தின் கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் 3 டிஎம்சி தண்ணீரையும், உஜ்ஜைனி அணையில் இருந்து பீமா நதியில் 3 டிஎம்சி தண்ணீரையும் விடுவிக்குமாறு கா்நாடக அரசு ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்ததை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அதன்படி, கிருஷ்ணா நதியில் ஒரு டிஎம்சி தண்ணீரை விடுவித்தமைக்காக மகாராஷ்ட்ர அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதமாகி வரும் நிலையில், வடகா்நாடக மாவட்டங்களில் கடுமையான கோடை நிலவுகிறது. இங்குள்ள மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீா் தேவைப்படுகிறது. எனவே, குடிநீா் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் 2 டிஎம்சி தண்ணீரையும், உஜ்ஜைனி அணையில் இருந்து பீமா நதியில் 3 டிஎம்சி தண்ணீரையும் விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா். இந்த கடிதத்தின் நகலை மகாராஷ்டிர மாநில துணைமுதல்வா் தேவெந்திர ஃபட்நவீஸுக்கும் முதல்வா் சித்தராமையா அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT