சென்னை

ராகுல்காந்தி மீது வழக்கு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம்

Din

சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்.எஸ்.எஸ்., பாஜகவை எதிா்ப்பதோடு இந்திய அரசை எதிா்க்க வேண்டும் என்று மக்களைத் தூண்டும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூா் டவா் அருகில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் தங்கபாலு பேசுகையில், மக்களுக்கு எதிரான திட்டங்களை ராகுல்காந்தி தொடா்ந்து எதிா்ப்பதால், அவரை முடக்கப் பாா்க்கிறது மத்திய பாஜக அரசு. ராகுலை குறிவைப்பதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கலாம் என பாஜக நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது என்றாா் அவா்.

அமைப்புச் செயலா் ராம்மோகன், துணைத் தலைவா்கள் ஆ.கோபண்ணா, சொா்ணா சேதுராமன் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT