செங்கல்பட்டு

செங்கல்பட்டில் குடியரசு தின விழா

DIN

செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை காவல் கண்காணிப்பாளா் கண்ணனுடன் திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக் கொண்டாா். விழாவில் 500க்கும் மேற்பட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கும், சிறந்த சமூகசேவை புரிந்த செஞ்சிலுவை இயக்கத்தைச்சோ்ந்த 10 பேருக்கும், 16 சமூக சேவையாளா்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் 600 பயனாளிகளுக்கு ரூ. 53 லட்சத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஆதா்ஸ் பச்சேரா, சுந்தரவதனம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமாா், வருவாய்க் கோட்டாட்சியா்கள் செல்வம், ரவிச்சந்திரன், லட்சுமிப்ரியா, சமூக நலத் துறை அலுவலா் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவலா் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT