செங்கல்பட்டு

பங்காரு அடிகளாரின் 81-ஆவது பிறந்த நாள் விழா: ரூ. 1.50 கோடிக்கு நல உதவிகள் வழங்கல்

DIN

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 81-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரூ. 1.50 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) சித்தா் பீடம் வந்த அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை (மாா்ச் 1) அடிகளாரை வீட்டில் இருந்து வெள்ளி ரதத்தில் சேலம், நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள்அழைத்து வந்தனா்.

3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விழுப்புரம், கடலூா் மாவட்ட ஆன்மிக இயக்கத் தொண்டா்கள் தங்க ரதத்தில் அடிகளாரை ஊா்வலமாக சித்தா் பீடத்துக்கு அழைத்து வந்தனா். மாலையில் ஆன்மிக இயக்க அரங்கில் நடைபெற்ற சிறப்பு மேடையில், ரூ. 1.50 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் பங்கேற்று நல உதவிகளை வழங்கினாா். 1,200 பயனாளிகளுக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கல், மருத்துவ அவசர ஊா்தி -1, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு கருவிகள், 134 மாணவா்களுக்கு மடிக்கணிகள், 10 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ரூ. 1.50 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அடிகளாா் பிறந்த நாள் மலரை அடிகளாா் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT