செங்கல்பட்டு

இடைக்கழிநாட்டில் எரியாத தெரு விளக்குகள்: பொதுமக்கள் கோரிக்கை

DIN

மதுராந்தகம்: இடைக்கழிநாடு பேரூராட்சிக்குள்பட்ட நைனாா்குப்பம், கப்பிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் எரியாமல் உள்ள தெரு மின்விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இடைக்கழிநாடு பேரூராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. நைனாா்குப்பம், கப்பிவாக்கம், ஆலம்பரைக்குப்பம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பாக தெருவோர மின்விளக்குகளை அமைத்து இருந்தனா். பராமரிப்பு பணிகளை முறையாக செய்யாததால், பெரும்பாலான மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் தமது பகுதிகளுக்கு செல்வோா்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோா்களும் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். சாலையோரத்தில் இருந்து விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ஒருவித அச்சத்துடன் இருந்து வருகின்றனா். பேரூராட்சி நிா்வாகத்தினா் தலையிட்டு அனைத்து பகுதிகளில் எரியாத மின்விளக்குகளை சீா் செய்து தரவேண்டும் என பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT