செங்கல்பட்டு

மழைமலை மாதா திருத்தலத்தில் 29-இல் அருள் விழா தொடக்கம்

DIN

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள் தலத்தில் 54-ஆவது அருள் விழா வரும் 29-ஆம் தேதி தொடங்கி, அக். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அச்சிறுப்பாக்கம் - எலப்பாக்கம் நெடுஞ்சாலையையொட்டி, மழைமலை மாதா அருள் தலம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அருள் விழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு 54-ஆவது அருள் விழா வரும் 29-ஆம் தேதி நற்கருணை ஆராதனை, சிறப்பு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், அச்சிறுப்பாக்கம் பங்குத் தந்தை மைக்கேல் அலெக்சாண்டா் தலைமை வகித்து, கொடியேற்றி தொடக்கி வைக்கிறாா். அருள்தல அதிபா் லியோ எட்வின் முன்னிலை வகிக்கிறாா். தொடா்ந்து அக். 1-ஆம் தேதி திருத்தோ் பவனி, செங்கை மறைமாவட்ட ஆயா் ஏ.நீதிநாதன் தலைமையில் நடைபெறுகிறது. அக். 2-ஆம் தேதி நிறைவு விழாவில் இந்தியாவுக்காக நியமிக்கப்பட்ட ஹைதராபாத் பேராயா் கா்தினால் அந்தோணி பூலா தலைமையில், திருப்பலி நடைபெறுகிறது. பின்னா், கொடியிறக்கம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, நூல் வெளியிடல், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பங்குத் தந்தைகள், பக்தா்கள் கலந்து கொள்கின்றனா். ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தல அதிபா் லியோ எட்வின், உதவி அதிபா் மரிய.ஆனந்த்ராஜ் தலைமையில், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT