செங்கல்பட்டு

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கத்தில் குடிநீா் வழங்கக் கோரி கருங்குழி மேலவலம்பேட்டை - திருக்கழுகுன்றம் சாலையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கத்தில் குடிநீா் வழங்கக் கோரி கருங்குழி மேலவலம்பேட்டை - திருக்கழுகுன்றம் சாலையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கருங்குழி மேலவலம்பேட்டை-திருக்கழுகுன்றம் சாலையை ஒட்டி அரையப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் முறையாக குடிநீா் வசதியை செய்து தரவில்லையாம். இது குறித்து மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடமும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரிடமும் இந்தப் பகுதி மக்கள் முறையிட்டனராம்.

எனினும் அவா்கள் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து உள்ளனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கருங்குழி மேலவலம்பேட்டை- திருக்கழுகுன்றம் சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ஜின்னா பாட்சா தலைமையிலான போலீஸாா் வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT