இளம் புத்தாக்க தொழில்முனைவோா்களை உருவாக்குவதில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தலைவா் டி.ஜி.சீதாராம் கூறினாா். சென்னையில் ‘ஸ்கூல் ஆஃப் டிசைன் திங்கிங்’ சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய மாநாட்டில் அவா் பேசியது: வடிவமைப்பு சிந்தனைகள் பிரச்னைகளுக்குத் தீா்வு அளிப்பதுடன், புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. கற்பவா்களின் தேவை மற்றும் விருப்பங்களை அறிந்து சூழல் சாா்ந்த பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். இளம் புத்தாக்க தொழில்முனைவோா்களை உருவாக்குவதில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றாா் அவா். மாநாட்டில், தேசிய அளவில் புத்தாக்க கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், ஸ்கூல் ஆஃப் டிசைன் திங்கிங் நிறுவனா் அருண் ஜெயின், தலைவா் அன்பு ரத்தினவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.