சென்னை

கைதியிடம் செல்லிடப்பேசி பறிமுதல்

DIN

பூந்தமல்லி கிளைச் சிறையில் கைதியிடம் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள கிளைச் சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 கைதிகள் உள்ளனர். இங்கு சிறைத் துறை அதிகாரி கோதண்டராமன் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார். 
18 கைதிகள் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில், சூளைமேட்டைச் சேர்ந்த கைதி விஜய்தண்டபாணி (45) செல்லிடப்பேசி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறைத் துறை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT